உலக சந்தையில் மீண்டும் எகிறிய கச்சாய் எண்ணெய் விலை!

மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் 9 சதவீதத்திற்கும் அதிகமான திடீர் உயர்வு பதிவாகியுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரப்படி, ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றிற்கு 7.29 டொலர்கள் அல்லது 9.59 சதவீதம் அதிகரித்து 83.30 டொலர்களாகவும், டபிள்யூ.டி.ஐ (WTI) கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றிற்கு 6.73 டொலர்கள் அல்லது 9.42 சதவீதம் அதிகரித்து 78.14 டொலர்களாகவும் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Follow & Share




