கபில சந்திரசேன வழக்கில் புதிய தகவல்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணையில், அடையாளம் தெரியாத மருந்துகள் தொடர்பான அரசாங்க இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மரணமடைந்தவர் கிடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மருந்துகள் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள போதிலும், அதன் அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, குறித்த அறிக்கைகளை விரைவாக சமர்ப்பிக்குமாறு நினைவூட்டல் கடிதங்களை அனுப்ப நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
விசாரணையின் முன்னேற்றத்தை ஆராய்வதற்காக வழக்கு எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளது.
Follow & Share




