LATEST
அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு நீதிமன்றம் எச்சரிக்கை மணி!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு காற்று எச்சரிக்கைஅரசின் நடவடிக்கைக்கு எதிராக சட்டத்தரணிகள் இன்று கூடுகின்றனர்!அபிவிருத்தி முதலீட்டை அதிகரிக்கும் புதிய பொருளாதாரத் திட்டம்சாலை விபத்துகள் அதிகரிப்பு – 4 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழப்பு!யானை பிரச்சினைக்கு மூங்கில் உயிரி வேலி – அரசு திட்டம்!எசல பெரஹேராவில் போதைப்பொருளுடன் காவடி குழுவினர் கைது!தொடரை யார் கைப்பற்றப் போகிறார்கள்? இன்று இலங்கை–பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதல்!அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு நீதிமன்றம் எச்சரிக்கை மணி!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு காற்று எச்சரிக்கைஅரசின் நடவடிக்கைக்கு எதிராக சட்டத்தரணிகள் இன்று கூடுகின்றனர்!அபிவிருத்தி முதலீட்டை அதிகரிக்கும் புதிய பொருளாதாரத் திட்டம்சாலை விபத்துகள் அதிகரிப்பு – 4 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழப்பு!யானை பிரச்சினைக்கு மூங்கில் உயிரி வேலி – அரசு திட்டம்!எசல பெரஹேராவில் போதைப்பொருளுடன் காவடி குழுவினர் கைது!தொடரை யார் கைப்பற்றப் போகிறார்கள்? இன்று இலங்கை–பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதல்!
உள்ளூர்

அரசின் நடவடிக்கைக்கு எதிராக சட்டத்தரணிகள் இன்று கூடுகின்றனர்!

July 29, 2026 · Tamil Ceylon LK

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட  பொதுச் சபை கூட்டம் இன்று (29) கொழும்பில் நடைபெறவுள்ளது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.

இதன்படி, இன்று காலை 11 மணிக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

“இது எந்தவொரு தனிநபருக்கோ அல்லது நீதிபதிக்கோ தொடர்பான பிரச்சனை அல்ல. இது நீதிமன்றத்தின் சுதந்திரம், அரசியலமைப்பின் கோட்பாடுகள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பது தொடர்பான மிகவும் முக்கியமான தேசிய விடயமாகும். இவ்வாறான அடிப்படை அரசியலமைப்பு மாற்றங்கள், பரந்த அளவிலான பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் கலந்துரையாடல்கள், வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய நடைமுறைகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே, இந்த முக்கியமான தேசிய விடயம் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களை இன்று முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் இந்த  பொதுச்  சபை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கௌரவத்துடன் அழைக்கின்றேன்.”

Related Stories

மேலும் ›