LATEST
கொழும்பு செல்லும் பயணிகள் மாற்று வழி பயன்படுத்துங்கள்!நாளை பள்ளிக்குச் செல்ல வேண்டாம்! முக்கிய அறிவிப்புபேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!27% சரிவு! இலங்கை வாகன சந்தையில் என்ன நடக்கிறது?கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி மக்களே அவதானம்!ஈரான் பேச்சுவார்த்தை எதிரொலி! கச்சா எண்ணெய் விலை சரிந்ததுஇலங்கையில் வானிலை மோசமடைகிறது! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை20 கைதிகள் பூசா சிறைக்கு – சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நடவடிக்கை!கொழும்பு செல்லும் பயணிகள் மாற்று வழி பயன்படுத்துங்கள்!நாளை பள்ளிக்குச் செல்ல வேண்டாம்! முக்கிய அறிவிப்புபேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!27% சரிவு! இலங்கை வாகன சந்தையில் என்ன நடக்கிறது?கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி மக்களே அவதானம்!ஈரான் பேச்சுவார்த்தை எதிரொலி! கச்சா எண்ணெய் விலை சரிந்ததுஇலங்கையில் வானிலை மோசமடைகிறது! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை20 கைதிகள் பூசா சிறைக்கு – சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நடவடிக்கை!
உள்ளூர்

கொழும்பு செல்லும் பயணிகள் மாற்று வழி பயன்படுத்துங்கள்!

August 3, 2026 · Tamil Ceylon LK

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து விழுந்தமையினால் அவ்வீதியூடான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

​ மண்மேடுகளும், பாறைகளும் வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளமையினால், ஹட்டனிலிருந்து கினிகத்தேனை, நாவலப்பிட்டி, கண்டி மற்றும் கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்களுக்கும், அத்திசைகளிலிருந்து ஹட்டன் நோக்கி செல்லும் வாகனங்களுக்கும் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட்டுள்ளன. 

​ இதன்காரணமாக வீதியின் இருபுறமும் பெருமளவிலான வாகனங்கள் நீண்ட வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 

​ மண்மேடுகளை அகற்றி வீதியின் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருவதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் பிரதேச மக்களும் இணைந்து செயற்படுகின்றனர். 

​ எவ்வாறாயினும், நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர். 

​ அதேநேரம் கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கடுகன்னாவை பகுதியிலும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›