LATEST
பெயர் மாற்ற சர்ச்சை – குற்றச்சாட்டை நிராகரித்த அர்ஜுன மகேந்திரன்!“மகிழ்ச்சியான சகாப்தத்தின் ஜனாதிபதி” என மைத்திரிக்கு கௌரவம்!அர்ச்சுனாவின் எம்.பி. பதவி உயர் நீதிமன்றத்திற்கு?விசாரணைக்கு ஆஜரான நிலையில் ரவி கைது!பாண் விலை மீண்டும் உயர்கிறது!95 பெட்ரோல் ரூ.475 ஆக குறைப்பு!குருந்தூர் விகாரைக்கு மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு!வாக்குமூலம் அளிக்க ஆஜரான ரவி!பெயர் மாற்ற சர்ச்சை – குற்றச்சாட்டை நிராகரித்த அர்ஜுன மகேந்திரன்!“மகிழ்ச்சியான சகாப்தத்தின் ஜனாதிபதி” என மைத்திரிக்கு கௌரவம்!அர்ச்சுனாவின் எம்.பி. பதவி உயர் நீதிமன்றத்திற்கு?விசாரணைக்கு ஆஜரான நிலையில் ரவி கைது!பாண் விலை மீண்டும் உயர்கிறது!95 பெட்ரோல் ரூ.475 ஆக குறைப்பு!குருந்தூர் விகாரைக்கு மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு!வாக்குமூலம் அளிக்க ஆஜரான ரவி!
Breaking

விசாரணைக்கு ஆஜரான நிலையில் ரவி கைது!

August 31, 2026 · Tamil Ceylon LK

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (31) இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டமொன்றிற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக ரவி கருணாநாயக்க இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார். 

இந்த விசாரணை தொடர்பில் முன்னர் வாக்குமூலம் அளிப்பதற்காக வருகை தருமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அந்த நேரத்தில் ஆணைக்குழுவில் ஆஜராகியிருக்கவில்லை. 

இதன் காரணமாக அண்மையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கும் சென்றிருந்த நிலையில், அந்த நேரத்தில் அவர் வீட்டில் இருக்கவில்லை. 

தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக வாக்குமூலத்தை வழங்குவதற்கு வேறு ஒரு திகதியை வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் ஊடாகக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

அதற்கமைய வழங்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக இன்றைய தினம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானதை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

மேலும் ›