LATEST
ஆறு மாதங்களில் பாரிய எரிபொருள் செலவு!நெல் கொள்வனவுக்கு பச்சைக்கொடி!சிறை அதிகாரிகளுக்கான இழப்பீடு வழங்கப்பட்டது!உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகரிப்பு!2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியானது!வாக்குமூலம் வழங்க வந்த நாமல் ராஜபக்ஷ!நந்தா மாலினிக்காக தேசிய துக்க தினங்கள்!பொலிஸ் நற்சான்றிதழ் சேவை தற்காலிகமாக முடக்கம்!ஆறு மாதங்களில் பாரிய எரிபொருள் செலவு!நெல் கொள்வனவுக்கு பச்சைக்கொடி!சிறை அதிகாரிகளுக்கான இழப்பீடு வழங்கப்பட்டது!உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகரிப்பு!2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியானது!வாக்குமூலம் வழங்க வந்த நாமல் ராஜபக்ஷ!நந்தா மாலினிக்காக தேசிய துக்க தினங்கள்!பொலிஸ் நற்சான்றிதழ் சேவை தற்காலிகமாக முடக்கம்!
Breaking

நந்தா மாலினிக்காக தேசிய துக்க தினங்கள்!

August 21, 2026 · Tamil Ceylon LK

மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவையடுத்து பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மூன்று நாள் தேசிய துக்க காலத்தில், அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. 

இதற்கமைவாக, இன்று (21), நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) ஆகிய தினங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவுறுத்தலானது 04/2026 ஆம் இலக்க உள்நாட்டலுவல்கள் சுற்றறிக்கையின் ஊடாக அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள்/அரசாங்க அதிபர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகளின் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

2026 ஒகஸ்ட் 21 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கையில், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோக பண்டார கையொப்பமிட்டுள்ளார். 

மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவையடுத்து ஒகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய தினங்களை தேசிய துக்க தினங்களாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. 

இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி தனது 82 ஆவது வயதில் நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (20) காலமானார்.

Related Stories

மேலும் ›