கொங்கோவின் புகாவு நகரை உலுக்கிய தீ விபத்து!

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள புகாவு நகரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 19 சிறுமிகளும் 5 சிறுவர்களும் அடங்குவர்.
அத்துடன், தீ விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான நெரிசலில் சிக்கியும், மூச்சுத்திணறியும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
29 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களில் 21 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, குடியிருப்புப் பகுதியில் ஆரம்பித்த இந்தத் தீ, இரண்டு பாடசாலைகளுக்கும், அருகில் இருந்த சுமார் 300 மரத்தாலான வீடுகளுக்கும் பரவி முற்றிலும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
Follow & Share




