அவுஸ்திரேலியா செல்லும் மாணவர்களே கவனம் – புதிய விதிகள் வரலாம்!

புதிய குடியேற்றத் திட்டத்தின் கீழ், சர்வதேச மாணவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் உள்துறை அமைச்சர் டோனி பர்க் முன்வைத்துள்ள புதிய குடியேற்ற மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி, பெரும்பாலான சர்வதேச மாணவர்களுக்கு தங்களது துணைவர், பிள்ளைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதற்கான வாய்ப்பு கட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் சர்வதேச மாணவர்களுக்கு இந்த புதிய நடவடிக்கையால் பாதிப்பு ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow & Share




