யோஷித ராஜபக்ஷ மீதான வழக்கு: பூர்வாங்க விசாரணை மாநாட்டிற்காக திகதியிடப்பட்டது!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பூர்வாங்க விசாரணை மாநாட்டிற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்ஸி ஃபொரஸ்ட் ஆகியோரின் வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் இன்று (16) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குற்றப்பத்திரிகையில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் மற்றும் இரண்டாவது பிரதிவாதி தொடர்பான அரச தரப்பு நிலைப்பாட்டை அன்றைய தினம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
முறையற்ற வகையில் ஈட்டப்பட்ட சுமார் 59 மில்லியன் ரூபாவை வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்தமைக்காக இவர்கள் மீது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




