அதிகரிக்கும் டெங்கு நோயாளர் எண்ணிக்கை!

இலங்கையில் 2026-ஆம் ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 72,430 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 17,051 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், நேற்று (15) ஒரே நாளில் 1,195 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக மேல் மாகாணத்தில் 38,160 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாவட்ட ரீதியாக கம்பஹா மாவட்டத்தில் 15,082 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 14,447 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 5,124 பேரும் இதுவரை பதிவாகியுள்ளனர். இது தவிர தெற்கு மாகாணத்தில் 11,274 பேரும், சபரகமுவவில் 6,073 பேரும், மத்திய மாகாணத்தில் 6,026 பேரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். டெங்கு தொற்று காரணமாக இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
Follow & Share




