LATEST
மாவிட்டபுரத்தில் முருகப்பெருமானின் பிரமாண்ட இரதோற்சவம்!கிரிஷ் விவகாரத்தில் நிஸ்ஸங்கவிடம் வாக்குமூலம்!சாகர கைது: மனோ கணேசன் எழுப்பிய கேள்வி!ஓய்வு வயது விவகாரம் சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி சந்திப்பு!பலத்த காற்று, மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!இஷாரா செவ்வந்தி மீண்டும் விளக்கமறியலில்!வீட்டுக்குள் பதுக்கப்பட்ட 7,000 சிகரெட்டுகள் மீட்பு!810 போ#தை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!மாவிட்டபுரத்தில் முருகப்பெருமானின் பிரமாண்ட இரதோற்சவம்!கிரிஷ் விவகாரத்தில் நிஸ்ஸங்கவிடம் வாக்குமூலம்!சாகர கைது: மனோ கணேசன் எழுப்பிய கேள்வி!ஓய்வு வயது விவகாரம் சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி சந்திப்பு!பலத்த காற்று, மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!இஷாரா செவ்வந்தி மீண்டும் விளக்கமறியலில்!வீட்டுக்குள் பதுக்கப்பட்ட 7,000 சிகரெட்டுகள் மீட்பு!810 போ#தை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!
உள்ளூர்

ஓய்வு வயது விவகாரம் சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி சந்திப்பு!

August 11, 2026 · Tamil Ceylon LK

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்து விவாதிப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு நாளை பிற்பகல் 1 மணிக்கு சந்திப்பொன்றை வழங்கியுள்ளார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை, அண்மையில் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தனர்.

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

அச்சட்டமூலத்தின்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லை 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லை 65 ஆகவும் திருத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் குறித்த அரசியலமைப்புத் திருத்தத்தை தற்போதைய சந்தர்ப்பத்தில் செய்ய வேண்டாம் என்பதே சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடாகும்.

முன்னெடுக்கப்பட்ட இத்தீர்மானம் தொடர்பாக, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய உள்ளிட்ட குழுவினர் அண்மையில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுடனும் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தனர்.

அக்கலந்துரையாடலைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக, ஜனாதிபதிய தெளிவுபடுத்துவதற்கான சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்தித் தருமாறு நீதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்தார்.

Related Stories

மேலும் ›