LATEST
லக்கல புதிய நகர நீர் வழங்கல் திட்டம் இன்று மக்கள் பாவனைக்கு!22ஆவது திருத்தத்திற்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு!கொலம்பியா பேரழிவு: இலங்கை ஆழ்ந்த கவலை!இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு முக்கிய பேச்சுவார்த்தை!யானைகளின் எதிர்காலம் நமது பொறுப்பு!அரிய சூரிய கிரகணத்திற்காக காத்திருக்கும் உலகம்!பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் மழைமீன்பிடி அமைச்சராக இருந்த காலத்து விவகாரம் ராஜித மீது வழக்கு!லக்கல புதிய நகர நீர் வழங்கல் திட்டம் இன்று மக்கள் பாவனைக்கு!22ஆவது திருத்தத்திற்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு!கொலம்பியா பேரழிவு: இலங்கை ஆழ்ந்த கவலை!இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு முக்கிய பேச்சுவார்த்தை!யானைகளின் எதிர்காலம் நமது பொறுப்பு!அரிய சூரிய கிரகணத்திற்காக காத்திருக்கும் உலகம்!பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் மழைமீன்பிடி அமைச்சராக இருந்த காலத்து விவகாரம் ராஜித மீது வழக்கு!
தொழில்நுட்பம்

செப்.1 முதல் ஆப்பிள் நிறுவன புதிய சி.இ.ஓ-ஆக ஜான் டெர்னஸ் பொறுப்பேற்பு

April 21, 2026 · Tamil Ceylon LK

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு பிறகு இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்ட நிலையில், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு டிம் குக் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

65 வயதான குக், செப்டம்பர் 01-ஆம் திகதியன்று தலைமை செயல் அதிகாரி பொறுப்புகளை ஆப்பிள் நிறுவனத்தின் வன்பொருள் பொறியியல் தலைவரான ஜான் டெர்னஸிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், அதே சமயம், கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள அந்த நிறுவனத்தில் நிர்வாகத் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பதும், இத்தகைய ஒரு அசாதாரணமான நிறுவனத்தை வழிநடத்த நம்பப்பட்டதும் என் வாழ்வின் மிகப்பெரிய பாக்கியமாகும்நான் என் முழு உள்ளத்தாலும் ஆப்பிளை நேசிக்கிறேன்.

இவ்வளவு புத்திசாலித்தனமான, புதுமையான, படைப்பாற்றல் மிக்க மற்றும் ஆழ்ந்த அக்கறை கொண்ட ஒரு குழுவுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்,” என்று குக் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார் .

இந்நிலையில், செப்.1ல் இருந்து வன்பொருள் பொறியியல் தலைவரான ஜான் டெர்னஸ் பொறுப்பேற்பார் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Stories

மேலும் ›