LATEST
விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிராக சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு – நீதிமன்ற உத்தரவுமுன்னாள் காவல்துறைத் தலைவர் மரணம் – இரண்டு சிறப்பு பொலிஸ் குழுக்கள் நியமனம்பொலிஸ் துறையில் முக்கிய நியமனம்! வருண ஜயசுந்தருக்கு புதிய பதவி!மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூடு – இளைஞர் உயிரிழந்தார்34 ஆண்டுகளுக்கும் மேலான பொலிஸ் சேவை… சி.டி. விக்ரமரத்ன காலமானார்கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அவதானம்! கடல் சீற்றம் அதிகரிக்கும்பிரான்சில் புதிய சட்டம்!விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிராக சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு – நீதிமன்ற உத்தரவுமுன்னாள் காவல்துறைத் தலைவர் மரணம் – இரண்டு சிறப்பு பொலிஸ் குழுக்கள் நியமனம்பொலிஸ் துறையில் முக்கிய நியமனம்! வருண ஜயசுந்தருக்கு புதிய பதவி!மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூடு – இளைஞர் உயிரிழந்தார்34 ஆண்டுகளுக்கும் மேலான பொலிஸ் சேவை… சி.டி. விக்ரமரத்ன காலமானார்கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அவதானம்! கடல் சீற்றம் அதிகரிக்கும்பிரான்சில் புதிய சட்டம்!
உள்ளூர்

கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அவதானம்! கடல் சீற்றம் அதிகரிக்கும்

July 17, 2026 · Tamil Ceylon LK

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

வட, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இதேவேளை காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன், காற்று மணிக்கு சுமார் 30-40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.

சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

வாகரையிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.0 – 2.5 மீற்றர் வரை உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Stories

மேலும் ›