அரசு நிலத்தை விற்க முயற்சி! சிக்கிய மெர்வின் சில்வா – பிரசன்ன ரணவீர; கம்பஹா நீதிமன்றத்தில் அதிரடி!

கிரிபத்கொட நகரில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தைப் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கு, கம்பஹா உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நயன செனவிரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் பிரசன்ன ரணவீர உட்பட மொத்தம் ஆறு பேர் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்ட ஆலோசகர் சமதாரி பியசேன, சந்தேக நபர்கள் ஒவ்வொருவரிடமும் உரிய குற்றச்சாட்டுப் பத்திரங்களைச் சமர்ப்பித்தார்.
வழக்கு விசாரணைகளைத் துரிதமாக முன்னெடுக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வழக்கு அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசு தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளார்.




