LATEST
பயணிகள் கப்பல் விபத்து – மீட்புப் பணி தொடர்கிறது!இலங்கை தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் புதிய வாய்ப்பு!காற்சட்டையில் மறைத்து கொண்டுவந்த குஷ்!வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை!பெரிம் தீவு ஹவுதிகள் கட்டுப்பாட்டில் – செங்கடலில் பதற்றம்!மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்துங்கள் – எதிர்க்கட்சி அழுத்தம்!2 மில்லியன் டாலர் லஞ்ச வழக்கு – நாமல் பிரதான சந்தேக நபரா?டெங்கு பாதிப்பு 97,000 கடந்தது – தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கை!பயணிகள் கப்பல் விபத்து – மீட்புப் பணி தொடர்கிறது!இலங்கை தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் புதிய வாய்ப்பு!காற்சட்டையில் மறைத்து கொண்டுவந்த குஷ்!வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை!பெரிம் தீவு ஹவுதிகள் கட்டுப்பாட்டில் – செங்கடலில் பதற்றம்!மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்துங்கள் – எதிர்க்கட்சி அழுத்தம்!2 மில்லியன் டாலர் லஞ்ச வழக்கு – நாமல் பிரதான சந்தேக நபரா?டெங்கு பாதிப்பு 97,000 கடந்தது – தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கை!
உள்ளூர்

பயணிகள் கப்பல் விபத்து – மீட்புப் பணி தொடர்கிறது!

September 13, 2026 · Tamil Ceylon LK

மோசமான வானிலை காரணமாக 240க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பயணிகள் கப்பல் ஒன்றுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து, ஜாவா கடலில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை 103 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், 140 பேர் இன்னும் காணாமல் போயுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து நடந்த நேரத்தில், குறித்த கப்பல் சுரபயாவிலிருந்து பன்ஜார்மாசின் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தில் கடல்வழிப் போக்குவரத்தே பிரதான போக்குவரத்து முறையாகும்.

விமானப் பயணம் விலை உயர்ந்ததாக இருப்பதால், பொதுமக்கள் மலிவான கடல்வழிப் பாதைகளை அதிகளவில் நாடி வருகின்றனர்.

இருப்பினும், நாட்டின் கடல்சார் துறையில் பாதுகாப்புத் தரங்களும் விதிமுறைகளும் முறையாகச் செயல்படுத்தப்படாததாலேயே இதுபோன்ற உயிரிழப்புகள் அடிக்கடி நிகழ்கின்றன என்று வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Related Stories

மேலும் ›