சுகீஷ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலை!

ன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஷ்வர பண்டார, இன்று (08) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளினால் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலை பேருந்தில் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். கடந்த ஜூன் 18 ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுகீஷ்வர பண்டார, இன்றைய தினம் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow & Share




