இலங்கையில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு!

இலங்கையில் டெங்கு நோயின் தாக்கம் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,839 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய தினம் (07) வரை கிடைக்கப்பெற்ற உத்தியோகபூர்வ தரவுகளின்படி, நாடு முழுவதும் டெங்கு தொற்றினால் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தவும், நுளம்பு பெருகும் இடங்களை ஒழிக்கவும் பொதுமக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறும், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Follow & Share




