முன்னாள் ஜனாதிபதி ரணில்,கோட்டை நீதவான் நீதிமன்றில்..

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
அரசு பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் அறிவிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
இந்த முறைப்பாடு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கின் மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
Follow & Share




